TNPSC Thervupettagam

காலம். வாக்கியத்தின் முடிவு

April 23 , 2019 1915 days 607 0
  • கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூகத் தொழில்முனைவோரான அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் பார்ச்யூன் பத்திரிக்கையினால் வெளியிடப்படும் 2019 ஆம் ஆண்டின் உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
  • இவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் 45-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளார்.
  • இவருடைய பணியைப் பிரதிபலிக்கும் “காலம். வாக்கியத்தின் முடிவு” என்ற ஒரு ஆவணப்படம் இந்த ஆண்டில் சிறந்த குறும் படப் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
  • இவர் குறைந்த விலையுடைய மாதவிடாய்த் துணிகளைத் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
  • இவர் கிராமப்புற இந்தியாவில் மாதவிடாய் சுழற்சிக்கான பாரம்பரியத் தூய்மையற்ற பழக்க வழக்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கான அடிப்படை செயல்முறைகளை புதுப்பித்ததற்காக பாராட்டப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்