இந்தியாவின் மிகப்பெரிய பன்முக கலாச்சராத் தன்மை கொண்ட வீதித் திருவிழாவான காலா கோடா விழா மும்பையில் தொடங்கியது.
இது 20 வருடங்களின் கலை மற்றும் கலாச்சாரத்தைத் திரைப்படம், நாடகம், நடனம், இலக்கியம் மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றின் மூலமாகக் கொண்டாடுகின்றது.
காலா கோடா அமைப்பின் தலைவர் மானெக் தாவர் ஆவார்.
இந்தத் திருவிழா மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின விழாவையும் மும்பையின் செழுமையான வரலாற்றின் சில பகுதிகளையும் கொண்டாடுவதற்காக ஜஹாங்கீர் கலை காட்சிக் கூடத்தில் ஒரு கண்காட்சியை நடத்தியது.
இவ்வருடத்திற்கான கருத்துரு “காலத்திற்கு ஒரு அளவீடு” என்பதாகும்.