TNPSC Thervupettagam

காவல் துறை – புதிய அறிவிப்புகள்

September 16 , 2021 1073 days 567 0
  • முன்னாள் முதல்வர் C.N. அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 அன்று 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
  • ஆவடி மற்றும் தாம்பரம் ஆகியவை காவல்துறை ஆணையரகமாக தரம் உயர்த்தப் படும் எனவும் அவர் அறிவித்தார்.
  • காவல்துறையைச் சீர்திருத்துவதற்காக ஒரு காவல் ஆணையத்தினை அமைக்கவும் அவர் முன்மொழிந்தார்.
  • இணையவழிக் குற்றங்களை ஒழிக்கவும் அதற்கான பயிற்சிகளை வழங்கவும் மாநில இணையவழி குற்றப் புலனாய்வு மையம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
  • மீனவச் சமூகத்தினைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் கடலோரக் காவல்படையுடன் இணைந்து பணியாற்றும் வகையில் நியமிக்கப் படுவர்.
  • சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப் பட்ட நிலையிலுள்ள குழந்தைகள் சமூக விரோதம் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க சிறுவர் மற்றும் பெண்கள் குழுக்கள் அமைக்கப்படும்.
  • இரண்டாம் நிலைக் காவலர் முதல் தலைமைக் காவலர் வரை காவல்துறை ஊழியர்களுக்கு வாராந்திர விடுமுறை அளிக்கப்படும்.
  • ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்