TNPSC Thervupettagam

காவிரியின் நீர்ப்பாசன அமைப்பை நவீனப்படுத்துதல் மற்றும் மீட்டெடுத்தல்

January 8 , 2021 1291 days 631 0
  • தமிழ்நாடு மாநில அரசானது காவிரி துணை ஆற்றுப் படுகையின் நீர்ப்பாசன அமைப்பை நவீனப்படுத்துதல் மற்றும் மீட்டெடுத்தல் ஆகியவற்றிற்காக ரூ.350 கோடி ரூபாய் மதிப்பிலான பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
  • இது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தின் பூதலூர் மற்றும் திருவையாறு.
    • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நந்தன் கால்வாயை வலுப்படுத்துதல்.
    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை மற்றும் காளிங்கராயன் அணைகளுக்கிடையே 7 தடுப்பணைகளைக் கட்டமைத்தல்.
  • 69 கிலோ மீட்டர் தூரத்திற்கு பவானி ஆறு மற்றும் அதன் துணையாற்றுப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 7 தடுப்பணைகள் கட்டமைக்கப்பட உள்ளன.
  • முன்மொழியப்பட்ட இந்த செயற்கை நீரேற்று அமைப்புகள் சத்தியமங்கலம், டிஎன் பாளையம், கோபிசெட்டிப் பாளையம் மற்றும் அந்தியூர் ஆகிய பகுதிகளில் கட்டமைக்கப் பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்