பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனாவின் (PMKVY) ஒரு பகுதியாக இந்தியத் திறன் மேம்பாட்டுச் சோதனைத் திட்டத்தின் கீழ் காஷ்மீரின் நம்தா கைவினைப் பொருட்கள் கலையானது வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
நம்தா கலைப் பொருட்களின் முதல் தொகுதியானது சமீபத்தில் ஐக்கியப் பேரரசு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது
அம்மாநிலத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,200 நபர்கள், அழிந்து வரும் இந்தக் கலையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
உள்ளூர் தொழில்துறைப் பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுத்தப் படுவதால், திறன் மேம்பாட்டுத் துறையில் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரிக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தத் திட்டம் அமைகிறது.