ஓசோன் அடுக்கினைப் பாதுகாப்பதற்காக 1989 ஆம் ஆண்டின் மாண்ட்ரியல் கோட்பாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கிகாலி திருத்தத்தினை இந்தியா சமீபத்தில் அங்கீகரித்துள்ளது.
கிகாலி திருத்தத்தின் கட்டமைப்பு நாடுகளுள் ஒன்றாக இருந்த போதிலும் அதனை அங்கீகரிப்பதற்கான தனது முடிவை அறிவித்த கடைசி நாடு இந்தியா ஆகும்.
மாண்ட்ரியல் கோட்பாட்டில், ஹைட்ரோ ஃபுளூரோ கார்பன்களை நீக்குவது குறித்த கிகாலி திருத்தத்தை மேற்கொள்வதற்காக ருவாண்டாவில் பேச்சுவார்த்தை (2016) மேற்கொள்ளப் பட்டது.
இந்தத் திருத்தத்தின் கீழ், மாண்ட்ரியல் கோட்பாட்டின் கீழான கட்டுப்படுத்தப்பட்ட வாயுக்கள் எனும் பட்டியலில் ஹைட்ரோ ஃபுளூரோ கார்பனையும் சேர்ப்பதற்கு உலக நாடுகள் ஒப்புக் கொண்டன.
இந்தத் திருத்தத்தின் கீழ், ஹைட்ரோ ஃபுளூரோ கார்பனின் பயன்பாடானது 2050 ஆம் ஆண்டுக்கு முன் 85% வரைக் குறைக்கப்பட வேண்டும்.
இந்திய நாடானது இந்த இலக்கை 2047 ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும்.
வளர்ச்சியடைந்த நாடுகள் 2036 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கினை அடைதல் வேண்டும்.
சீனாவிற்கு 2045 ஆம் ஆண்டானது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.