TNPSC Thervupettagam

கிராமச் செயலகம் – ஆந்திரப் பிரதேசம்

October 4 , 2019 1754 days 638 0
  • ஆந்திர மாநில அரசானது கிராமச் செயலகங்கள் என அழைக்கப்படும் புதிய நிர்வாகப் பிரிவை உருவாக்கியுள்ளது.
  • கிராமம் மற்றும் வார்டு செயலகங்களில் ஏறத்தாழ 1.26 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
  • 2019, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் மொத்தம் 11,158 கிராமச் செயலகங்களும் 3,786 வார்டு செயலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை மேலும் அதிகரிப்பதற்காக நிர்வாகப் பரவலாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாநில அரசாங்கத்தின் புதிய ஊழியர்கள் அரசாங்கச் சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வார்கள். மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்