பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது, “கிராம் மஞ்சித்ரா” எனப்படும் புவியிடஞ்சார்ந்த தகவல் முறைமை செயலி மற்றும் “mActionSoft” எனப்படும் கைபேசி செயலி போன்ற செயற்கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளை மேம்படுத்துவதையும், அடிமட்ட அளவிலான இடஞ்சார்ந்த திட்டமிடலை மேம்படுத்துவதையும் மற்றும் செயல் முறையில் தீவிரமான பங்கேற்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கருவிகள் புவி-இடஞ்சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்பாட்டுப் பணிகளைக் காட்சிப்படுத்துவதற்கும், திட்டமிடுவதற்குமான ஒரு ஒருங்கிணைந்தத் தளத்தை வழங்குகின்றன.
கிராம் மஞ்சித்ரா செயலி ஆனது, ஒற்றை மற்றும் ஒருங்கிணைந்த புவி-இடஞ்சார்ந்த தளமாக செயல்படுகிறது.