கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகமானது மாநில அளவிலான உள்ளூர் சுயாட்சி அமைப்புகளுடன் இணைந்து, "கிராம வண்டி" எனப்படும் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
சமீபத்தில், "சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு” கொண்ட நகரத்துக்கான "நகர்ப்புற போக்குவரத்தில் பாராட்டு விருதானது" இந்த கழகத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த விருதானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் நிறுவப் பட்டது.
அனைத்து இந்திய நகரங்களிலும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தச் செய்யும் நோக்கத்தில் செயல்படுத்தப் பட்டுள்ள திட்டங்கள் இந்த விருதிற்காக கருத்தில் கொள்ளப் பட்டன.