கிரீன்லாந்து சிகரத்தில் வெப்பநிலையானது 10 ஆண்டுகளுக்குள் 3வது முறையாக உறைநிலைக்கு மேலே சென்றதன் காரணமாக வரலாற்றிலேயே முதன்முறையாக அங்குப் பனிப்பொழிவிற்குப் பதிலாக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்படத் தொடங்கியது முதல், கிரீன்லாந்து பெற்ற மழைப்பொழிவிலேயே இது தான் அதிகன மழை என அமெரிக்க தேசியப் பனிப் பொழிவு மற்றும் பனிக்கட்டித் தரவு மையமானது கூறியுள்ளது.
குறிப்பு
கிரீன்லாந்து ஆனது ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்த உலகின் மிகப்பெரிய தீவாகும்.
இத்தீவின் மேற்பரப்பில் முக்கால் பகுதி ஆனது பனியால் மூடப்பட்டிருக்கும்.