நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணா அய்யர் விருது கேசவானந்தா பாரதிக்கு வழங்கப்படவிருக்கிறது. இவ்விருது சட்ட உதவி மற்றும் நலம் என்ற அறக்கட்டளையால் ஏற்படுத்தப்பட்டது.
இவர் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நீதிமன்ற வழக்கான “கேசவானந்தா பாரதி எதிர் கேரள அரசு வழக்கில்” (1973) மனுதாரராக செயல்பட்டார். இந்த வழக்கின் எண் 4A SCC 255 ஆகும். இந்த வழக்கு அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக் கொள்கை என்பதை அறிமுகப்படுத்தியது.