TNPSC Thervupettagam

கிழக்கத்திய மாநிலங்களின் முதல் பிராந்திய மாநாடு

April 24 , 2018 2279 days 722 0
  • நீர் வள ஆதாரங்கள் (Water Resources) மீதான கிழக்கத்திய மாநிலங்களின் முதல் பிராந்திய மாநாடு அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் நடைபெற்றது.
  • முக்கியமான நீர் வள ஆதாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை களைவதற்கான ஓர் முயற்சியாக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
  • மத்திய நீர் வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் (Ministry of Water Resources, River Development & Ganga Rejuvenation) இந்த மாநாட்டினை நடத்தியுள்ளது.
  • பீஹார், சத்திஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து கிழக்கத்திய மாநிலங்களுக்கு இடையேயான முக்கியமான நீர்வள ஆதாரங்கள் தொடர்பான  பிரச்சினைகள் (water resources issues), மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகள் (inter-state issues), மாநிலத்திற்குள்ளான மற்றும் மாநிலங்களுக்கிடையேயான வடிகால் பிரச்சினைகள் (Intra and Inter-basin issues) ஆகியவற்றை களைவதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்