TNPSC Thervupettagam

கீழடி 5வது கட்ட அகழ்வாராய்ச்சி

October 23 , 2019 1733 days 789 0
  • கீழடியில் அண்மையில் முடிவடைந்த ஐந்தாவது கட்டத்  தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் சுடுமண் குழாய்கள் புதியதாகக்  கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • இந்தக் குழாய்கள் தமிழ்நாட்டின் பிற அகழ்வாராய்ச்சி இடங்களில் காணப்படும் அனைத்து சுடுமண் குழாய்களைக் காட்டிலும்  ‘தனித்துவமானதாக’ அறியப் படுகிறது.
  • அவை ஒன்றன் மேல் ஒன்றாக கிடைமட்டமாக அடுக்கப் பட்டிருந்தன. எனவே அவை வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.
  • தொடர்ச்சியாக 10 சுடுமண் குழாய்களை உறுதியாகப் பொருத்துவதன் மூலம் ஒரு குழாய் அமைக்கப் பட்டுள்ளது.
  • இங்கு கண்டுபிடிக்கப்பட்ட குழாய் ஒன்றில் ஒரு மூடி காணப்பட்டது. இது நீரையோ அல்லது வேறு ஏதேனும் திரவத்தையோ வடிகட்டும் சாதனமாக பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
  • ஊர்வன போன்ற உயிரிகள் உள்ளே நுழைவதைத் தடுக்க இந்த மூடி போன்ற அமைப்பு பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்