TNPSC Thervupettagam

குடிநீரில் யுரேனியம்

April 13 , 2020 1561 days 642 0
  • இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் பாட்னாவின் புல்வாரிஷரிப்பில் உள்ள மகாவீர் புற்றுநோய் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்திய புதிய ஆய்வில், பீகார் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் நிலத்தடி நீரை யுரேனியம் மாசுபடுத்துகிறது என்று கண்டறியப் பட்டுள்ளது.
  • குடிநீர் விவரக் குறிப்பிற்கான “இந்திய தர நிர்ணயம் ஐஎஸ் 10500: 2012” ஆனது ஆல்பா மற்றும் பீட்டா உமிழ்ப்பான் போன்ற கதிரியக்க எச்சங்களின் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அதிகபட்ச வரம்பினை வரையறை செய்கின்றது.
  • இந்தியத் தரநிலை நிறுவனத்தின் படி, அனைத்துக் குடிநீர் தரங்களிலும் யுரேனியத்தின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்புவானது 0.03 மி.கி / லிட்டர் (உலகச் சுகாதார அமைப்பின் தற்காலிக வழிகாட்டுதலின்படி) ஆகும்.
  • அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகமானது மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் மாநில நிலத்தடி நீர் துறைகளுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங்களில் யுரேனியம் செறிவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்