TNPSC Thervupettagam

குடிமைப் பணித் தேர்விற்குத் தயாராகும் தேர்வர்களுக்கான திட்டம்

August 6 , 2023 350 days 205 0
  • குடிமைப் பணியாளர் தேர்விற்குத் தயாராகும் தேர்வர்கள் சிறந்தப் பயிற்சி வசதிகள் மற்றும் புத்தகங்களைப் பெற உதவச் செய்கின்ற ஒரு திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2023-24 ஆம் ஆண்டு மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், ஒவ்வோர் ஆண்டும் குடிமைப் பணியாளர் தேர்விற்குத் தயாராகும் 1,000 மாணவர்கள் ஒரு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படுவர்.
  • முதல்நிலைத் தேர்விற்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு தலா 7,500 ரூபாய் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆனது, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து ‘நான் முதல்வன்’ திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்