TNPSC Thervupettagam

குடியரசுத்தலைவரின் அரசு முறைப் பயணம்

April 10 , 2018 2294 days 639 0
  • ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 12 தேதி வரையிலான காலத்திற்கு சுவாஜிலாந்து, ஜாம்பியா, நிலநடுக்கோட்டில் அமைந்துள்ள கினியா (Equatorial Guinea)  ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணத்தை இந்திய குடியரசுத் தலைவர்   ராம் நாத் கோவிந்த்  மேற்கொண்டுள்ளார்.
  • நிலநடுக்கோட்டு கினியா மற்றும் சுவாஜிலாந்து ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
  • 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாம்பியாவிற்கு இந்திய குடியரசுத் தலைவருடைய பயணம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இது ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஆப்பிரிக்க கண்டத்திற்கான மூன்றாவது பயணமாகும்.
  • 2017 ஆம் ஆண்டு டிஜிபோட்டி நாட்டிற்கு முதல் அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டார். அதன் பின் நடப்பாண்டின் மார்ச் மாதம்  மொரிசியஸ் மற்றும்  மடகாஸ்கர் ஆகிய இரு நாடுகளுக்கு  இரண்டாவது அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்