உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘குன்வர் யாத்திரையை’ நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிட வேண்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குன்வர் யாத்திரை என்பது சிவ பக்தர்களால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒரு புனித யாத்திரையாகும்.
பெரும்பாலும் வடக்கு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், வெறும் கால்களில் நடந்து சென்று உத்தரகாண்டிலுள்ள ஹரித்துவாரில் கங்கை நதியிலிருந்து நீரைச் சேகரித்து தங்கள் பகுதியிலுள்ள சிவ ஆலயங்களில் சமர்ப்பிப்பர்.
2021 ஆம் ஆண்டு குன்வர் யாத்திரையானது ஜூலை 25 அன்று தொடங்க உள்ளது.
கடந்த ஆண்டு கோவிட் – 19 பெருந்தொற்று மற்றம் ஊரடங்கு காரணமாக இந்த யாத்திரையானது ரத்து செய்யப்பட்டது.