கும்பல் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் 2023
September 17 , 2023
307 days
179
- மத்தியப் பிரதேச மாநில அரசானது, கும்பல் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளது.
- இந்த சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு 4 முதல் 6 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும்.
- சாதி, மதம், மொழி அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நிகழும் கும்பல் கொலைச் சம்பவங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
- கும்பல் கொலைகள் மூலம் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்படும் கொலைகள் கும்பல் கொலைகளாகப் பரிசீலிக்கப்படும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/17-733.jpg)
Post Views:
179