TNPSC Thervupettagam

குரங்கு அம்மை நோய்ப் பரவல்

June 27 , 2022 790 days 486 0
  • உலக சுகாதார வலையமைப்பானது (WHN) குரங்கு அம்மை நோய்ப் பரவலைப் பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
  • இந்தப் பெருந்தொற்றானது ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு உள்ளே மட்டும் பரவ வில்லை என்பதையும், இந்தச் சமூகப் பரவலைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என்பதையும் இது குறிக்கிறது.
  • உலக சுகாதார வலையமைப்பு என்பது கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிவியலாளர்களை உள்ளடக்கிய ஒரு சுயாதீனமானக் கூட்டணியாகும்.
  • பொது சுகாதார அவசரநிலைப் பிரகடனம் என்பது உலகளாவிய எச்சரிக்கையின் மிக உயர்ந்த நிலையாகும்.
  • தற்போது இது கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் போலியோவிற்கு மட்டுமே பொருந்தும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்