உலக சுகாதார நிறுவனமானது, உலகளவில் குரங்கு அம்மை பரவி வருவதை 'சர்வதேச அளவில் சிக்கல் உண்டாக்கக் கூடிய பொது சுகாதார அவசரநிலை' என அறிவித்து உள்ளது.
இது 'பெருந்தொற்று' என்ற நிலையை விட ஒரு படி கீழே உள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று, அந்த அமைப்பு கோவிட்-19 தொற்று நோயை சர்வதேச அளவில் சிக்கல் உண்டாக்கக் கூடிய ஒரு பொது சுகாதார அவசர நிலையாக வகைப்படுத்தியது.
அந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதியன்று, உலக சுகாதார அமைப்பு அதனை 'பெருந் தொற்று' என்ற நிலைக்கு உயர்த்தியது.
சர்வதேச அளவில் சிக்கல் உண்டாக்கக் கூடிய ஒரு பொது சுகாதார அவசரநிலை பிரகடனம் "தற்காலிகமானது" என்பதோடு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை இது மதிப்பாய்வு செய்யப்படும்.
முந்தைய ஆண்டுகளில், எபோலா (2014), ஜிகா வைரஸ் (2016), H1N1 (2009), போலியோ வைரஸ் (2014) மற்றும் கோவிட்-19 ஆகியவை சர்வதேச அளவில் சிக்கல் உண்டாக்கக் கூடிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப் பட்டுள்ளன.