குரு தேக் பகதூரின் 400வது பிரகாஷ் பூரப்
May 4 , 2021
1179 days
555
- 2021 ஆம் ஆண்டு மே 01 அன்று இந்தியா குரு தேக் பகதூரின் 400வது பிரகாஷ் பூரப் தினத்தினைக் கொண்டாடியது.
- இவர் 9வது சீக்கிய மத குரு ஆவார்.
- இவர் 1621 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அமிர்தசரசில் பிறந்தார்.
- இவர் குரு ஹர்கோபிந்த் சிங்கின் இளைய மகனாவார்.
- இவர் 115 பாடல்களை எழுதியுள்ளார், அவை குரு கிரந்த் சாகிப்பில் சேர்க்கப் பட்டு உள்ளன.
- ஔரங்கசீப்பின் ஆணையின்படி குருதேக் பகதூருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.
- குரு தேக் பகதூருக்கு குருத்துவாரா சிஷ் கஞ்ச் சாகிப் (Gurudwara Sis Ganj Sahib) எனும் இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- குருதேக் பகதூரின் உடல் குருத்துவாரா ரக்கப் கஞ்ச் சாகிப் (Gurudwara Rakab Ganj Sahib) எனும் இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
- இவரது தியாகமானது ‘குரு தேக் பகதூரின் சாஹீதி திவஸ்’ (Shaheedi Divas of Guru Tegh Bahadur) என நினைவு கூறப்படுகிறது.
- இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24 ஆம் தேதி அனுசரிக்கப் படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/4-219.jpg)
Post Views:
555