இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் (Zoological Survey of India – ZSI) குழு ஒன்று அந்தமானின் நார்கொண்டம் தீவில் ஒரு புதிய பூச்சி உண்ணும் பாலூட்டி இனத்தைக் கண்டறிந்துள்ளது.
இந்த விலங்கிற்கு குரோசிடுரா நோர் கொண்டமைகா (Crocidura Norcondamica) எனப் பெயரிடப் பட்டுள்ளது.
இந்த விலங்கினமானது கிட்டத்தட்ட வீட்டு எலியின் அளவில் உள்ளது.
பூச்சிகளை உட்கொள்ளும் இந்த விலங்கினமானது காட்டுப் பகுதிகளில் வாழ்கிறது.
இவை அடர்ந்த நார்கொண்டம் காடுகளில் உள்ள பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் உதவுகின்றன.
இவை ஷ்ரூஸ் குடும்பத்தைச் சார்ந்தவை.
ஷ்ரூஸ் குடும்பத்தைச் சார்ந்த விலங்குகள் கொறிந்துண்ணிகள் (Rodents) அல்ல.