ஹரியானா மாநிலத்தில் நிலத்தடி நீர் குறைந்து வருவதனால் நீர் அதிகம் தேவைப்படும் பயிரான நெல்லைப் பயிரிடுவதைக் குறைப்பதற்கு ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் நிலத்தடி நீர்க் குறைவானது அம்மாநிலத்தில் 60 வறட்சி மண்டலங்கள் உருவாகக் காரணமாகியுள்ளது. இதில் 10 மாவட்டங்களில் 21 மிக அதிக மிக வறட்சி மண்டலங்களும் உள்ளடங்கும்.
அம்மாநில அரசு 7 வட்டாரங்களில் ஒரு பரிசோதனைத் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டம் விவசாயிகளுக்கு மானியங்கள் அளிக்கப்படுவதன் மூலம் “மக்காச் சோளம்” மற்றும் ‘துவரம் பருப்பு’ பயிரினங்களைப் பயிரிடுவதை ஊக்குவிப்பதாகும்.
புதிய திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா விதைகள் வழங்கப்பட விருக்கின்றன. விவசாயிகளுக்கு இரண்டு தவணைகளாக ஏக்கருக்கு ரூபாய் 2000 உதவித் தொகை வழங்கப்படும்.
மக்காச் சோளப் பயிர்க் காப்பீட்டுத் தொகையானது அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட விருக்கின்றது.
மேலும், உற்பத்தி செய்யப்பட்ட மக்காச் சோளம் அரசினால் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்படவிருக்கின்றது.