TNPSC Thervupettagam

குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் திருத்தச் சட்டம்) மசோதா, 2018

March 16 , 2018 2317 days 767 0
  • 12 வயதுக்கு கீழான சிறார்களை பாலியல் பலாத்காரம் அல்லது கூட்டு பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழி செய்யும் மசோதாவை {சட்டங்கள் (ராஜஸ்தான் திருத்தம்) மசோதா, 2018} ராஜஸ்தான்  மாநில சட்டமன்றம் இயற்றியுள்ளது.
  • இதன் மூலம், மத்தியப் பிரதேசத்தினைத் தொடர்ந்து சிறார்  பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கும் நாட்டின் இரண்டாவது இந்திய  மாநிலமாக இராஜஸ்தான் உருவாக்கியுள்ளது.
  • இந்த குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் திருத்தம்) மசோதா, 2018 ஆனது 1860-ன் ஆண்டின் இந்திய குற்றவியல் சட்டத்தில் (IPC – Indian Penal Code) பிரிவு 376-AA, பிரிவு 376-DD என இரு பிரிவுகளை சேர்க்கிறது.
  • இதற்கு முன் 2017-ல் மத்தியப் பிரதேச மாநிலமானது “குற்றவியல் சட்டம் (மத்தியப் பிரதேச திருத்த ) மசோதா 2017” {The Penal law (Madhya Pradesh Amendment) Bill 2017} எனும் மசோதாவை நிறைவேற்றியது. இது சிறார் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வழிகோலுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்