TNPSC Thervupettagam

குளிர்கால ஒலிம்பிக் – இந்திய தலைவர்

January 13 , 2018 2409 days 809 0
  • தென் கொரியாவின் பியாங்சாங் மாகாணத்தில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் பங்கு பெறும் இந்திய தடகள வீரர்களுக்கு ஹர்ஜின்தர் சிங் தலைமை பொறுப்பு வகிக்கவுள்ளார்.
  • இந்திய பனிக்கால வளைதடியாட்ட (Ice Hockey) சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றி வரும் ஹர்ஜின்தர் சிங்குக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் இப்பொறுப்பை அளித்துள்ளது.
  • தென் கொரியா பொறுப்பேற்று நடத்தும் இரண்டாவது ஒலிம்பிக் போட்டி இதுவாகும். முன்னதாக 1988-ஆம் ஆண்டின் கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது.
  • இது ஆசியாவில் நடைபெறும் மூன்றாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியாகும். இதற்கு முன் 1972-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் சப்போரோ நகரிலும், 1998-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் நகானோ நகரிலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
  • இதுவரை நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 2014-ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியே அதிக பொருட்செலவில் (51 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) நடைபெற்ற ஒலிம்பிக் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்