அசாமில் உள்ள, சிறப்புக் கவனம் தேவைப்படுகின்ற மற்றும் மதியிறுக்கம் கொண்ட குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமானது உடல்நலம் மற்றும் ஊட்டச் சத்துப் பிரிவில் 2023 ஆம் ஆண்டிற்கான குழந்தைகளுக்கான (சில்ட்ரன்ஸ்) சாம்பியன் விருதினை வென்றுள்ளது.
இந்த விருதானது, 2022 ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்காக டெல்லி ஆணையத்தால் நிறுவப் பட்டதாகும்.
கல்வி, நீதி, சுகாதாரம், ஊட்டச்சத்து, விளையாட்டு மற்றும் கலை வெளிப்பாடு ஆகியவற்றில் குழந்தைகளின் நலனுக்காகப் போராடும் தனிநபர்கள் மற்றும் பல நிறுவனங்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.