TNPSC Thervupettagam

குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல் அறிக்கை, 2023

July 6 , 2023 379 days 201 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது, “குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக வேண்டி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை” மேற்கோள் காட்டி, குழந்தைகள் மீது ஆயுத மோதல்களின் தாக்கம் குறித்த தனது வருடாந்திர அறிக்கையிலிருந்து இந்தியாவை நீக்கியுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது சுமார் 27,180 கடுமையான அத்துமீறல் சம்பவங்களை மதிப்பிட்டுள்ள நிலையில், அதில் சுமார் 24,300 சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப் பட்டன.
  • 2,880 சம்பவங்கள் முன்னதாகவே நடைபெற்றுள்ளன, ஆனால் 2022 ஆம் ஆண்டில் அவை உறுதி செய்யப்பட்டன.
  • 24 சூழ்நிலைகள் மற்றும் ஒரு பிராந்தியக் கண்காணிப்பு ஏற்பாடுகளில் நிகழ்ந்த அத்து மீறல்களில் 18,890 குழந்தைகள் (13,469 சிறுவர்கள், 4,638 சிறுமிகள், 783 பாலினம் தெரிய வில்லை) பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அதிகபட்ச எண்ணிக்கையிலான பல அத்துமீறல்களில் 8,631 குழந்தைகளின் கொலை (2,985) மற்றும் ஊனமாக்குதல் (5,655) போன்றவை அடங்கும்.
  • அதைத் தொடர்ந்து 7,622 குழந்தைகளின் பணி சேர்ப்பு மற்றும் பயன்பாடு மற்றும் 3,985 குழந்தைகள் கடத்தப்படுதல் ஆகியவை உள்ளன.
  • ஆயுதம் தாங்கியக் குழுக்களுடனான நிகழ்நேர அல்லது இணைப்புத் தொடர்புக்காக குழந்தைகள்  (2,496) கடத்தப்பட்டு, அடைத்து வைக்கப் படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்