TNPSC Thervupettagam

குழாய்வழி உரமாக்கல் முறை

October 4 , 2023 290 days 300 0
  • அசாம் அரசானது, தற்போது நடைபெற்று வரும் ஸ்வச்சதா ஹி சேவா பிரச்சாரத்தின் போது அதன் கிராமப்புற சமூகங்களிடையே குழாய் வழி உரத் தயாரிப்பு முறையினை பெருமளவில் ஊக்குவித்து வருகிறது.
  • 8 முதல் 10 அங்குல விட்டம் மற்றும் 1.25 மீட்டர் நீளம் கொண்ட PVC குழாய்களைப் பயன்படுத்திக் கரிமக் கழிவுகளை உரமாக மாற்றும் முறை குழாய் வழி உரமாக்கல் தொழில்நுட்பம் ஆகும்.
  • குழாய்கள் 25-30 செ.மீ. ஆழத்திற்கு தரையின் உள்ளே செங்குத்தாக வைக்கப்படும்.
  • மிஞ்சிய உணவு, பழங்கள் மற்றும் காய்கறித் தோல்கள், பூக்கள், சாணம், வேளாண் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை மட்டுமே இந்தக் குழாய்களில் உரமாக்க முடியும்.
  • புழுக்களின் வளர்ச்சி துரிதமாக்குவதற்காக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மிகச் சிறிதளவு பசுவின் சாணம் மற்றும் காய்ந்த இலைகளைத் தண்ணீரில் கலந்து உள்ளே ஊற்றப்படுகிறது.
  • மழைநீர் குழாய்களுக்குள் செல்லாதவாறு இது எப்போதும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
  • 2 மாதங்களுக்குப் பிறகு குழாயைத் தூக்கி உரத்தினை வெளியெடுக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்