குவைத்தின் ஆட்சியாளரான ஷேக் சபாஹ் அல்-அகமது-அல் சபாஹ் சமீபத்தில் காலமானார்.
சிற்றரசரின் இறப்பைத் தொடர்ந்து, அந்நாட்டின் இளவரவசரான 83 வயது நிரம்பிய ஷேக் நவாப் அல் அகமது அல் சபா சபாஹ் அந்நாட்டின் மன்னராக, அல்-அகமதுவின் இடத்தில் நியமிக்கப்பட வேண்டி அந்நாட்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப் பட்டுள்ளார்.
ஷேக் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று அந்நாட்டு மன்னராகப் பதவியேற்றார்.
தேசிய சபையின் ஆதரவைத் தொடர்ந்து தான் இறக்கும் வரை, அதாவது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று வரை அந்நாட்டின் ஆட்சியாளராக அவர் பணியாற்றினார்.
ஈராக் நாட்டுப் படைகளால் குவைத் ஆக்கிரமிக்கப்பட்ட 1990-91 வளைகுடாப் போரின் போது, ஈராக்கிற்கு ஆதரவளித்த நாடுகளுடனான நட்புறவை மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட தனது முயற்சிகளுக்காக வேண்டி அவர் “அரபிய உறவின் டீன்” (dean of Arab Diplomacy’) என்று அழைக்கப்படுகின்றார்.