TNPSC Thervupettagam

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை

June 9 , 2024 39 days 138 0
  • 'பொது அதிகார அமைப்பு' என்ற சொல் 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 2(h) பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளதால், அந்த வரையறையின் கீழ், மாநிலத்தில் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் வராது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
  • முன்னதாக தமிழ்நாடு தகவல் ஆணையமானது (TNIC) பயிர் மற்றும் நகைக் கடன் விவரங்களை வெளியிட 2022 ஆம் ஆண்டு மே 04 ஆம் தேதியன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
  • 2021-22 ஆம் ஆண்டில் மட்டும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சுமார் 14.84 லட்சம் விவசாயிகளுக்கு 10,292 கோடி ரூபாய் பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்