TNPSC Thervupettagam

கூழைக்கடா பறவைகள் திருவிழா - 2018

February 6 , 2018 2355 days 1025 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் கொல்லேறு ஏரியில் அமைந்துள்ள அடபகா பறவைகள் சரணாலயத்தில் (Atapaka Bird Sanctuary) முதல் முறையாக கூழைக்கடா (Pelican) பறவைகள் திருவிழா - 2018 நடத்தப்பட்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் சுற்றுலா ஆணையம் கிருஷ்ணா மாவட்ட நிர்வாகத்துடன் இனைந்து இத்திருவிழாவை நடத்தியுள்ளது.
  • அண்மையில் அடாபாகா பறவைகள் சரணாலயமானது உலகின் மிகப்பெரிய பெலிகான்ரிகளில் (Pelicanry) ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • சாம்பல் நிற கூழைக்கடா பறவைகள் வளையமைத்து, இனப்பெருக்கம் செய்யும் இடமே பெலகான்ரி (Pelicanry) எனப்படும்.
  • Spot Billed Pelican என்றும் அழைக்கப்படுகின்ற சாம்பல் கூழைக்கடாக்களானது 1972-ஆம் ஆண்டின் இந்திய வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act 1972) அட்டவணை I-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • மேலும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature) சிவப்புத் தரவு புத்தகத்தின் (Red Data Book) கீழ் இப்பறவையானது “அச்சுறு நிலை அண்மித்த இனமாக“ (Near Threatened) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கொல்லேறு ஏரி

  • கொல்லேறு ஏரியானது நாட்டின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளுள் ஒன்றாகும். இது கிருஷ்ணா மற்றும் கோதாவரி டெல்டாவிற்கு இடையே அமைந்துள்ளது.
  • 1972ன் இந்திய வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இது வன உயிர் சரணாலயமாக 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இது நவம்பர் 2002ல் ராம்சார் உடன்படிக்கையின்படி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக (Wetlands of International Importance) பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்