TNPSC Thervupettagam

கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டம்

December 10 , 2020 1321 days 950 0
  • இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழுவானது ஆர் கீழணை என்ற ஒரு அணைக்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஒத்தி வைத்துள்ளது.
  • இது கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • நாட்டில் முதலாவது நதிநீர் இணைப்புத் திட்டம் இதுவாகும்.
  • இந்தத் திட்டமானது நீர் அதிகமாக உள்ள மத்தியப் பிரதேசத்தின் கென் நதியிலிருந்து வறட்சி அதிகமாகவுள்ள பந்தேல்கண்ட் பகுதிக்கு நீர்ப்பாசனத்தை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெட்வா நதிக்கு நீர் திறக்கப் படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கென் மற்றும் பெட்வா நதிகள் மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகின்றன.
  • இவை யமுனை நதியின் துணை நதிகளாகும்.
  • கென் நதியானது பன்னா புலிகள் காப்பகத்தின் வழியே பாய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்