கேரளா விரைவில் பறவைகளின் மீதான ஒரு சிவப்புநிறப்பட்டியலை (அச்சுறுத்தல் நிலையில் உள்ள) தயாரிக்க உள்ளது.
கேரள மாநில வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் இந்தியப் பறவைக் கணக்கெடுப்பு அமைப்பு தலைமையிலான கேரளப் பறவைக் கண்காணிப்புக் குழு ஆகிய இரண்டும் இணைந்து இந்தப் பிராந்தியச் சிவப்பு நிறப் பட்டியல் மதிப்பீட்டை நடத்த உள்ளது.
இந்தப் பட்டியல் தயாரானதும், ஒரு பிராந்தியம் சார்ந்தப் பறவைகளின் சிவப்புநிறப் பட்டியலைக் கொண்ட முதல் மாநிலமாக கேரளா திகழும்.
உலக அளவில் பொதுவாகக் காணப்படும் ஓர் இனம், பிராந்திய அளவில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனமாக மட்டுமே இருக்கலாம்.
உலகளாவிய IUCN சிவப்புநிறப் பட்டியலின் படி, கேரளாவில் 64 பறவை இனங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளன.
அவற்றுள், சிவப்புத் தலைக் கொண்ட கழுகு மற்றும் வெண்முதுகுக் கழுகுகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன.