இந்திய ரிசர்வ் வங்கியானது கேரள வங்கியை அமைப்பதற்காக கேரள அரசுக்கு தனது இறுதி ஒப்புதலை அளித்துள்ளது.
கேரள வங்கியானது மாநிலத்தின் மிகப்பெரிய வங்கி அமைப்பாக செயல்பட இருக்கின்றது.
கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (14 மாவட்டங்கள்) உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகள் (மலப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கியைத் தவிர்த்து) மாநில அரசின் ஒருங்கிணைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தன.
இந்தப் புதிய வங்கியானது கேரளாவில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதால், வங்கிகள் இணைப்பிற்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் அந்த மாநிலத்திற்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.