கைதிகள் வங்கிகளிடமிருந்துத் தனிநபர் கடன்களைப் பெற அனுமதிக்கும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது கைதிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் சட்ட விவகாரங்கள் தொடர்பான செலவுகளைச் சந்திப்பதற்கும் உதவுகிறது.
இது நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் இது போன்ற முதல் வகை முயற்சியாகும்.
மகாராஷ்டிரா மாநிலக் கூட்டுறவு வங்கியானது இத்திட்டத்தின் கீழ், 7% என்ற வட்டி விகிதத்தில் 50,000 வரை கடன் வழங்கும்.
இந்த வகை கடன் "கவ்தி" கடன் என்று அழைக்கப்படுகிறது.