கையால் துப்புரவுப் பணி மேற்கொள்ளல் குறித்த அறிக்கை
June 10 , 2023 409 days 226 0
நாட்டில் மொத்தமுள்ள 766 மாவட்டங்களில் 508 மாவட்டங்களில் (66%) மட்டுமே கையால் துப்புரவுப் பணி மேற்கொள்ளப் படுவது இல்லை என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட 58,000 பாதாள சாக்கடைத் தொழிலாளர்களுக்கு தலா ₹40,000 ரூபாய் ஒருமுறை வழங்கீடாக அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக அவர்களில் சுமார் 22,000 பேர் (பாதிக்கும் குறைவானவர்கள்) திறன் பயிற்சி திட்டங்களுடன் இணைக்கப் பட்டுள்ளனர்.
கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுத் திட்டமானது, கழிவகற்றும் பணியை 100% இயந்திரமயமாக்கும் நமஸ்தே எனும் திட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.