TNPSC Thervupettagam

கோடக் மஹிந்திரா வங்கி – மைக்ரோ ஏ.டி.எம் இயந்திரங்கள்

October 17 , 2021 1008 days 469 0
  • தனியார் வங்கி நிறுவனமான கோடக் மஹிந்திரா வங்கியானது நாடு முழுவதும் மைக்ரோ (சிறு) தானியங்கி பணம் வழங்கும் (ஏ.டி.எம்) இயந்திரங்களைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • பணம் பெறும் அட்டைகளை வைத்துள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பணம் எடுத்தல் மற்றும் கணக்கு நிலுவைகளைச் சரிபார்த்தல் போன்ற முக்கிய வங்கிச் சேவைகளுக்கு வேண்டி கோடக் மைக்ரோ ஏ.டி.எம். இயந்திரங்களை உபயோகிக்கலாம்.
  • ஏ.டி.எம். இயந்திரங்களின் சிறிய அளவு வடிவமான மைக்ரோ ஏ.டி.எம் இயந்திரங்கள் ஒரு சிறிய கையடக்கச் சாதனமாகும்.
  • இந்த வங்கியானது மைக்ரோ ஏ.டி.எம். இயந்திரங்களைத் தொடங்க, அதன் விரிவான வணிகத் தொடர்பாளர் கட்டமைப்பினைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்