TNPSC Thervupettagam

கோடைக்கால சுவச் பாரத் வகுப்பு

April 6 , 2018 2298 days 669 0
  • வருகின்ற கோடைக்கால விடுமுறையில் கல்லூரி இளைஞர்களை கிராமப்புறங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்திட அரசு சுவச் பாரத் கோடைக்கால வகுப்பினை (2018) நடத்தத் திட்டமிட்டுள்ளது.

  • இந்த முயற்சி மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு அமைச்சகத்தின் கூட்டிணைவோடு சுவச் பாரத் திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்தும் அமைச்சகமான குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் வெளியிடப்பட உள்ளது.
  • இந்த கோடைக்காலப் பயிற்சி வகுப்பினை நிறைவு செய்யும் ஒவ்வொரு பயிற்சியாளரும் சுவச் பாரத் திட்டத்தால் பயிற்சி வகுப்புச் சான்றிதழ் வழங்கப் பெறுவர்.
  • இந்தப் பயிற்சியில் பங்கெடுத்து நிறைவு செய்யும் மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் விருப்ப அடிப்படையிலான தரமதிப்பு முறையில் 2 தரமதிப்புப் புள்ளிகள் வழங்கப்படும்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்