ஒடிசா மாநில ஆளுநரான கணேஷி லால் என்பவர் 5 நாட்கள் நடைபெறும் கோனார்க் திருவிழாவின் 30வது பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
ஒடிசாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை எடுத்துக் காட்டும் இத்திருவிழாவானது ஒடிசாவில் தொடங்கியது.
இத்திருவிழாவின் கருப்பொருள் சுற்றுச்சூழல் சுற்றுலா, கண்காட்சிகள், கலாச்சாரம், பெண்களுக்கு அதிகாரமளிப்பு, நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இதனுடன் சேர்த்து, 2019 ஆம் ஆண்டின் சர்வதேச மணல் கலை விழாவின் 8வது பதிப்பானது ஒடிசாவின் சந்திரபாகா கடற்கரையில் தொடங்கியுள்ளது.