மத்திய அரசானது, ஜன் ஜாதி ஆதிவாசி நியாய் மகா அபியான் திட்டத்தின் கீழ், அழிந்து வரும் கோலம் பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தி உள்ளது.
அவர்கள் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவாக (PVTG) பட்டியலிடப் பட்டுள்ளனர்.
உள்ளூர் ஆரம்பச் சுகாதார நிலையங்களை (PHCs) வலுப்படுத்துவதன் மூலமும் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலமும் கிராமங்களில் வசிக்கும் இந்த பழமையான பழங்குடியினக் குழுக்களின் உடல்நலம் மற்றும் கல்வியில் இது கவனம் செலுத்தும்.
இந்தத் திட்டத்தின் கீழ், மண்டலத் தலைமையகத்தில் இருந்து இந்த கிராமங்களுக்கு சாலை இணைப்பு மேம்படுத்தப்படும்.
உள்ளூர் சாலைகளை மேம்படுத்துதல், குடிநீர் வழங்குதல், மின்சாரம் அல்லது சூரிய ஆற்றல், மற்றும் LPG எரிவாயு அடுப்புகள் மற்றும் கொள்கலன்களை வழங்குதல் ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்துகிறது.
கோலம்போலி, குல்மே மற்றும் கொல்மி என அழைக்கப்படும் கோலம் பழங்குடியினர் மத்தியப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்கின்றனர்.
இந்தப் பழங்குடியினக் குழுக்கள் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகப் பட்டியலிடப் பட்டுள்ளனர் என்பதோடு இந்தக் குழுவினர் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் வசிக்கின்றனர்.