கோவா மாநில அரசானது போர்ச்சுக்கீசிய காலத்தைச் சேர்ந்த பொது உரிமையியல் சட்டத்தைத் (UCC - Uniform Civil Code) திருத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே கோவா மாநிலத்தில் அம்மாநிலத்தைச் சேராதவர்கள் செய்து கொள்ளும் திருமணங்களைப் பதிவு செய்வதை அனுமதிக்க இந்தத் திருத்தம் வழிவகை செய்யும்.
கோவா மாநிலத்தைச் சேராதவர்களின் திருமணப் பதிவுகள் தற்பொழுது கோவாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
UCC ஆனது அப்போதைய போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்களால் 1870 ஆம் ஆண்டில் கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவா 1961 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னரும் கூட இந்த பொது உரிமையியல் சட்டம் தக்க வைக்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டில் கோவா ஒரு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.