TNPSC Thervupettagam

கோவேக்ஸின் மருந்திற்கான மூன்றாம் கட்ட சோதனை

November 23 , 2020 1374 days 514 0
  • பாரத் பயோடெக் நிறுவனமானது கோவேக்ஸின் மருந்திற்கான மூன்றாம் கட்ட மருத்துவச் சோதனை தொடங்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் கொரானா வைரஸ் நோய்த் தடுப்பிற்காக நடத்தப்படும் ஒரு மிகப் பெரிய மருத்துவச் சோதனை இதுவாகும்.
  • மேலும் இதற்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகத்தினாலும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
  • இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Medical Research - ICMR) அமைப்புடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.
  • கோவேக்ஸின் என்பது இந்தியாவின் ஒரு உள்நாட்டு கோவிட் – 19 நோய்த் தடுப்பு மருந்தாகும்.
  • இது தேசிய நச்சுயிரியல் மையம் (NIV - National Institute of Virology) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது பாரத் பயோடெக்கின் பிஎஸ்எல்-3 (உயிரிப் பாதுகாப்பு நிலை - 3) என்ற ஒரு உயிரிக் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப் பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு வெரோ செல் உற்பத்தித் தளத்தில் தயாரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்