மத்தியக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக 2021 ஆம் ஆண்டின் கௌசலாச்சார்யா விருதுகளை வழங்கினார்.
திறன் சூழலமைப்பிற்கு முன்மாதிரியான பங்களிப்பினை ஆற்றிய 41 திறன் பயிற்சியாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த 41 பயிற்சியாளர்கள் பயிற்சித் தலைமை இயக்குநரகம், தொழிற்பயிற்சி, பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, ஜன் சிக்சன் சன்ஸ்தான் மற்றும் இதரப் பயிற்சித் திட்டங்களில் பணியாற்றுபவராவர் ஆவர்.