‘சக்ரவத்’ எனப்படும் ஒரு வருடாந்திரக் கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) பயிற்சியானது (AJHE-23) கோவாவில் நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டில் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டது முதல், சக்ரவத் எனப்படும் இந்த வருடாந்திரக் கூட்டு HADR பயிற்சியானது, மூன்று படைகளின் பங்கேற்பை உள்ளடக்கிய பல் அமைப்புப் பயிற்சியாக மாறியது.
இந்தப் பயிற்சியானது 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தரைப்படை, இந்திய கடற் படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றால் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டு பயிற்சியில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள எட்டு நாடுகள் பங்கேற்றன.