சங்கீத நாடக அகாடமி ஆனது செப்டம்பர் 15 ஆம் தேதியன்று 84 கலைஞர்களுக்கு சிறப்பு ஒற்றைமுறைச் சாதனை விருதுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75 ஆண்டு நிறைவினை நினைவுகூரும்.
75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதுவரை தங்கள் வாழ்க்கையில் எந்த தேசிய அங்கீகாரத்தினையும் பெறாதவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் ஆனது, நாடகக் கலைத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்களுக்கு இந்தியா வழங்கும் தேசிய கௌரவம் என்று அகாடமியின் தலைவர் சந்தியா புரேச்சா தெரிவித்தார்.
இதில் விருது பெற்ற தமிழர்கள்:
அச்சலாபுரம் சின்னதம்பி – நாதஸ்வரம்
புருசை சுப்ரமணியம் – தெருக் கூத்து
சுந்தரேசன் ராமமூர்த்தி – நாடகம் (நடிப்பு)
V.A.K ரங்காராவ் - நடன இசை (அறிஞர் & ஆவணப் படுத்தல்)