பேரிடர் அபாயக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகமானது (United Nations Office for Disaster Risk Reduction - UNDRR) பேரிடர் அபாயக் குறைப்பிற்காக 2019 ஆம் ஆண்டின் “சசகாவா விருதினை” பிரமோத் குமார் மிஸ்ரா என்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிக்கு வழங்கி கௌரவித்தது.
இவர் பிரதம மந்திரியின் கூடுதல் முதன்மைச் செயலாளராக உள்ளார்.
இது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் பேரிடர் அபாயக் குறைப்பிற்கான சர்வதேசத் தளச் சந்திப்பின் 6-வது பதிப்பின் போது அறிவிக்கப்பட்டது.
பேரிடர் அபாய மேலாண்மையில் ஐக்கிய நாடுகளின் மிகவும் புகழ்பெற்ற விருது இதுவாகும்.
1989 ஆம் ஆண்டில் UNDRR மற்றும் நிப்பான் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த விருதினை ஏற்படுத்தின.
2019 ஆம் ஆண்டின் “சசகாவா விருதின்” கருத்துருவானது, “அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான சமுதாயங்களைக் கட்டமைத்தல்” என்பதாகும்.
இதன் இதர வெற்றியாளர்கள்
சிட்னேய் புர்டாடோ
சிவில் பாதுகாப்புத் துறையின் இயக்குநர், காம்பினாஸ், பிரேசில்
பிஜல் பிரகம்பட்
இந்திய மகிளா வீட்டுவசதி சேவா அறக்கட்டளையின் இயக்குநர்