மேற்கு வங்காள அரசானது சட்டமன்ற மேலவையை (விதான் பரிசத்) அமைக்க உள்ளது.
சட்டமன்ற மேலவையை நிறுவுவதற்கு சட்டமன்ற கீழவையில் அதற்கான மசோதாவினைத் தாக்கல் செய்து அதற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
மேற்கு வங்காளத்தில் 1969 ஆம் ஆண்டு வரை மேலவையானது நடைமுறையில் இருந்தது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 169வது சட்டப்பிரிவின் கீழ், ஒரு மாநிலத்தின் சட்டமன்ற கீழவையானது அங்கு சட்ட மேலவையை அமைப்பதற்காகவோ (அ) நீக்குவதற்காகவோ ஒரு தீர்மானத்தினைச் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது என்றால் அந்த மாநிலத்தில் மேலவையை அமைக்கவோ (அ) நீக்கவோ வேண்டி ஒரு சட்டத்தினைப் பாராளுமன்றம் இயற்றலாம்.