சத்தீஸ்கரில் மாநில அரசு வேலை மற்றும் கல்வி ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் இனத்தவர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார்.
இது சத்தீஸ்கரை மொத்தமாக 72% இட ஒதுக்கீடு கொண்ட மாநிலமாக (32% - பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், 13% - பட்டியல் இனத்தவர், 27% - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) மாற்றவிருக்கின்றது.
இது சத்தீஸ்கரை நாட்டில் மிக அதிக இட ஒதுக்கீட்டைக் கொண்ட மாநிலமாக ஆக்குகின்றது. உச்ச நீதிமன்றத்தினால் கூறப்பட்ட இட ஒதுக்கீடு மீதான 50% வரம்பைக் காட்டிலும் இது அதிகமாக இருக்கின்றது.