P. வீரமுத்துவேல் அவர்கள் சந்திரயான்-3 ஆய்வுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றினார்.
இவர் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
திருச்சியில் உள்ள முந்தைய பிராந்தியப் பொறியியல் கல்லூரியில் (தற்போது தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்) இயற்பியல் பொறியியலில் முதுகலைக் கல்வியை நிறைவு செய்தார்.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
அவருக்கு 2003 ஆம் ஆண்டில் HAL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப் பட்டது, ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.
2014 ஆம் ஆண்டில் இஸ்ரோவில் இணைந்தார்.
புகழ்மிக்க சந்திரயான்-2 ஆய்வுத் திட்டத்திற்கான இணைத் திட்ட இயக்குநராக அவர் அறிவிக்கப்பட்டார்.
சந்திரயான்-3 ஆய்வுத் திட்டத்திற்கான ஒரு திட்ட இயக்குநராக நியமிக்கப் படுவதற்கு முன்பு, வீரமுத்துவேல் இஸ்ரோவின் துணை இயக்குநராகப் பணிபுரிந்தார்.