டெல்லி காவல்துறையானது, G20 அமைப்பின் உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பான முறையில் தகவல் தொடர்புகளை மேற்கொள்வதற்கு சந்தேஸ் என்ற ஒரு செயலியைப் பயன்படுத்தியது.
இது தேசிய தகவல் மையத்தினால் (NIC) உருவாக்கப்பட்டது.
ஆவணங்கள் மற்றும் பிற முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஆய்வாளர்கள் மற்றும் ஆணையர்களால் இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டது.
இந்தச் செயலியானது ஆவணங்களுக்காகப் பாதுகாப்பான வகையில் இணைய நெறிமுறையைப் பின்பற்றுவதோடு இவற்றை இந்தச் செயலியில் மட்டுமே பார்க்க முடியும்.